காரிமங்கலம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை

தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 84). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு இருந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தி அடைந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மனவேதனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story