விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2023 1:00 AM IST (Updated: 16 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே பெத்தம்பட்டி அருகே மந்திரி கவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி பேபி (வயது 43). கடன் பிரச்சினையால் மனமுடைந்த பேபி கடந்த 8-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேபி இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story