தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தாராபுரம் அடுத்த தளவாய் பட்டினம் முத்து ராஜபுரம் பகுதியை சேர்ந்த சங்கிலி ராஜ் (வயது55) மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனது கணவர்களுடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகின்றனர்.சங்கிலி ராஜ் மனைவி கண்ணம்மாளுடன் சொந்த ஊரான தளவாய் பட்டினத்தில் வசித்து வந்த போது சங்கிலிராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு மனைவி பாண்டிச்சேரி சென்று விட்டார்.தனிமையில் இருந்த சங்கிலிராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.
இந்நிலையில் சங்கிலிராஜ் தாயார் லட்சுமி (75).தனது மகன் 2 நாட்களாக காணவில்லையென சங்கிலிராஜ் வீட்டுக்கு நேற்று மதியம் வந்தார். அப்போது வீட்டின் மேல் கூரையில் மகன் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக சங்கிலிராஜ் உடலை கீழே இறக்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.