வாலிபரை மிரட்டியவர் கைது


வாலிபரை மிரட்டியவர் கைது
x

நெல்லை அருகே வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). இவருக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ரோணி (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரோணியை, கருப்பசாமி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கருப்பசாமியை கைது செய்தனர்.


Next Story