விஷம் குடித்த புதுப்பெண் சாவு


விஷம் குடித்த புதுப்பெண் சாவு
x

செல்போனில் ‘கேம்’ விளையாடியதை கண்டித்ததால் விஷம் குடித்த புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

தாண்டிக்குடி அருகே உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது. வெண்ணிலா வீட்டில் இருக்கும்போது செல்போனில் 'கேம்' விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை மணிகண்டன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா, கடந்த மாதம் 17-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story