கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்



கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
கன்னங்குறிச்சி:
சேலம் சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் தேவதர்சினி (வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதிைய சேர்ந்த குணசீலன் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire