மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

மழை பெய்தபோது மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்
தென்காசி
கடையம்:
அம்பை அருகேயுள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவைச்சேர்ந்த முகம்மது பாரூக் மகன் முகம்மது பைசல் (வயது 33). இவர் ஆழ்வார்குறிச்சி திருமலைகொழுந்து தெருவில் வசித்து வந்தார். கடந்த 6-ந் தேதி மதியம் இவரும், இவரது அண்ணன் செய்யது ரவீன் (37) ஆகிய இருவரும் கருத்தப்பிள்ளையூரில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மழைபெய்ததால் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகம்மது பைசல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story