கோவில்பட்டியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்


கோவில்பட்டியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்
x

கோவில்பட்டியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை 33-வது வார்டு சாஸ்திரி நகர், பிரதான சாலையில் ரூ.20 லட்சம் செலவில், இருபுறமும் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நகரசபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், பொறியாளர்கள் ரமேஷ், சரவணன், நகரசபை கவுன்சிலர் சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story