அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்

வெண்ணந்தூர் அருகே அழுகிய நிலையில் கிடந்த கூலி தொழிலாளி பிணத்தை போலீசார் மீட்டனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பகுதியில் இருந்து ஆட்டையாம்பட்டி பிரிவு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்த போலீசார் வெண்ணந்தூர் அடுத்து மசக்காளிப்பட்டி மூலக்காடு பகுதியைச் சேர்ந்த முத்தான் மகன் பழனிவேல் (வயது 65) கூலி தொழிலாளி என்பதும், இவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை என்றும் தெரிகிறது. மேலும் இறந்தவர் மது போதையில் பாலத்தின் மீது அமர்ந்திருக்கும்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் இறந்து இருக்கலாம் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து இறந்தவரின் மனைவி பாப்பாத்தி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.