கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்


கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
x

ஆம்பூர் அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடுதிரும்ப வில்லை

ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 22). இவரது தந்தை அதே பகுதியில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். அங்கு புவனேஷ்வரன் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற புவனேஷ்வரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றின் அருகில் அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் மூக்குக் கண்ணாடி இருப்பதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து உள்ளனர். அதன்பேரில் புவனேஷ்வரின் பெற்றோர் அங்கு சென்று பார்த்ததில் தங்களது மகன் அணிந்திருந்த பொருட்கள் என்பதை உறுதி செய்தனர்.

கிணற்றில் பிணமாக கிடந்தார்

பின்னர் இதுகுறித்து உமராபாத் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் புவனேஷ்வரன் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சநேதகத்தில் மின் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி அவரை தேடினர். சுமார் 9 மணி நேரம் தேடியும் புவனேஷ்வரனை கண்டுபிடிக்க முடியவில்லை.

போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணியை கைவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடியபோது புவனேஷ்வரன் கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கா போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story