தூக்கு போட்டு வாலிபர் சாவு


தூக்கு போட்டு வாலிபர் சாவு
x

தூத்துக்குடியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவகண்ணன் (வயது 27). இவர் ஐ.டி.ஐ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை அவரது தாய் கண்டித்து உள்ளார். இதில் மனம் உடைந்த சிவகண்ணன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தூக்கு போட்ட அதே கம்பியில், அவரது தந்தையும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story