வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகாவீரன், விவசாயி. இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் வழக்கம் போல தங்களுடைய நிலத்திற்கு சென்றனர்.
பின்னர் 12 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
மர்மநபர்கள் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை திருடி சென்றது ெதரிய வந்தது.
இதுகுறித்து மகாவீரன் பொன்னூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story