புகையிலைப்பொருட்கள் பதுக்கியவர் கைது



புகையிலைப்பொருட்கள் பதுக்கியவர் கைது
திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் ரெட்டியபட்டி பகுதியில் உள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் விற்பனைக்காக 19 கிலோ புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மளிகை கடையை நடத்தி வந்த ரெட்டியபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 37) என்பவரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire