அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம்


அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம்
x

ஆலங்காயம் பகுதியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட புலவர்பள்ளி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்டு 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் பராமரிப்பு பற்றிய வழிமுறைகளை பணியாளர்களுக்கு மிக எளிய முறையில் எடுத்து கூறினர்.

இந்த முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.


Next Story