மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்


மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்
x

வாட்டாக்குடி கிராமத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மீன்வளக்கல்லூரி உதவி பேராசிரியர் ஜாக்குலின் பேராரோ பேசினர். வேளாண்மை உதவி அலுவலர் கலைவாணி மற்றும் வேளாண்மை துறை, கால்நடை துறையினர் கலந்துகொணடு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாசேதுங், சுதந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story