தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x

பழனி அருகே வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த சின்னகலையம்புத்தூரை சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 67). கூலித்தொழிலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சைமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வயிற்று வலியால் அவதிப்பட்ட, பாச்சலூர் அருகே உள்ள சுடலைப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜசேகர் (21) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story