கால்நடை மருத்துவ முகாம்

காமேஸ்வரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் (திருப்பூண்டி கிழக்கு) ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதாகணேசன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் மற்றும் திருக்குவளை கால்நடை டாக்டர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 970 கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம் ஆகியவை செய்யப்பட்டன. சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் விழுந்தமாவடி கால்நடை உதவி டாக்டர் சரவணன், கால்நடை ஆய்வாளர் கீதாராமன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரபா, தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story