கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா


கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
திருப்பூர்


வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல்.கே.சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.

இதையொட்டி சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தூர், பெருமாள்புதூர், வேப்பங்காடு சித்தி விநாயகர், சக்தி விநாயகர் கோவிலில் ஆவணி மாத மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சித்தி விநாயகர், சக்தி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்கார மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், சுண்டல், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story