வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

நீடாமங்கலத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீடாமங்கலம் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் வாக்காளர் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நீடாமங்கலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். பல்நோக்கு சேவை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரு உறுதிமொழி வாசித்தார்.இதில் பேரூராட்சி உறுப்பினர் திருப்பதி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story