அகசிப்பள்ளி ஊராட்சியில்ரூ.6 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


அகசிப்பள்ளி ஊராட்சியில்ரூ.6 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

அகசிப்பள்ளி ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி புளியந்தோப்பு கொத்தாலன் கொட்டாய் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறு முதல் சின்டெக்ஸ் டேங்க் வரை குழாய் அமைத்து 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சென்றாயன், ஊர்கவுண்டர் திம்மராயன், கோவிந்தன், மாதன், ரமேஷ், குமார், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story