சாலையை கடக்க முயன்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி


சாலையை கடக்க முயன்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

தேனி

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி கிழக்கு ரத்னம் நகரை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 70). இவர், மின்வாரிய துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தேனி- பெரியகுளம் ரோட்டில் பழைய மாருதி ஷோரூம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் கோதண்டம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story