குன்னூர் பகுதியில் காட்டு யானை முகாம்

குன்னூர் பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளது.
குன்னூர்
சமவெளி பகுதியில் போதிய மழையில்லாதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் வெயிலின் தாக்கம் மற்றும் உணவுத்தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 9 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதன்பின்னர் கடந்த சில நாட்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலா சீசன் தொடங்க உள்ளதால் மீண்டும் குன்னூர் பகுதிக்கு காட்டு யானைகள் தொடங்கியுள்ளன. இதன்படி வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குன்னூர் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.