கவரிங் நகைகளை அடகு வைக்க முயன்ற பெண் கைது

வைத்தீஸ்வரன் கோவிலில் கவரிங் நகைகளை அடகு வைக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவிலில் கவரிங் நகைகளை அடகு வைக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கவரிங் நகைகள்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் மகன் கன்ஷியாம் (வயது 32)். இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இந்த அடகு கடையில் பெண் ஒருவர் நகைகளை அடகு வைக்க சென்றுள்ளார். அப்போது நகைகளை, கடை உரிமையாளர் கன்ஷியாம் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அந்த நகைகள் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.
கைது
இதுகுறித்து அவர் வைத்தீஸ்வரன் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போலி நகைகளை அடகு வைத்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஆர். கே. புளியம்பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி அமுதா (46) என்பதும். இவர் மேலையூரில் உள்ள ஒரு கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.27 ஆயிரம் பெற்றுள்ளதும் தெரிய வந்தது.இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்து அவரை சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவாரூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.