ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி


ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x

ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே உள்ள பெரியேரி ஊராட்சி தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், நதியா, யுவராணி என்ற மகள்களும், லிங்கேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன், பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று மதியம் பெரியேரி ஏரியில் அவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணன் ஏரியில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story