உறவினரை தாக்கிய வாலிபர் கைது

செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டியில் தகராறை விலக்கி விட சென்ற உறவினரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகன் சேகர் (வயது 26). இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த ஆண்டிச்சாமியின் உறவினர் ஆண்டி (56) என்பவர் தகராறை விலக்கிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சேகர், ஆண்டியை அவதூறாக பேசி, கல்லால் தாக்கினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த ஆண்டி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்.
Related Tags :
Next Story