ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் மோசடி... நடிகர் விஜய்யின் அலுவலக ஊழியர் கைது

பல்வேறு காரணங்களைக் கூறி, தன்னிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-01-01 12:48 GMT

சென்னை,

இன்ஸ்டாகிராம் மூலம் சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி ஏமாற்றிய புகாரில், நடிகர் விஜய்யின் அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யின் கணக்காளர் எனக்கூறி பதிவிட்டு இருந்த ராஜேஷ் என்பவர், தனக்கு சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி அறிமுகமானதாகவும், பின்னாளில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, நெருக்கமாக பழகியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ராஜேஷிற்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதை அறிந்து கேட்டபோது, தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை, நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டுவதாகவும் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களைக் கூறி, தன்னிடம் இருந்து அவர் 10 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில், ராஜேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்