தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

தஞ்சை வடக்குவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). இவர் சம்பவத்தன்று தஞ்சை வடக்கு வீதி எம்.ஜி.ஆர்.சிலை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ரமேசிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரமேஷ்

Update: 2016-12-13 22:15 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). இவர் சம்பவத்தன்று தஞ்சை வடக்கு வீதி எம்.ஜி.ஆர்.சிலை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ரமேசிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரமேஷ் பணம் தர மறுத்துள்ளார். அப்போது அந்த 3 பேரும், ரமேசிடம் இருந்து ரூ.200–ஐ பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், வடக்குவாசல் மேலத்தெருவை சேர்ந்த அய்யப்பன் (21) மற்றும் கீழதெருவை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் 2 பேர் எனத்தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் தஞ்சை மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்