திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பேர் கைது

திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பேர் கைது

Update: 2016-12-18 20:46 GMT
திருச்சி,

திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் திருகண்ணன்(வயது 42). இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது நண்பர் ஒருவருடன் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக அங்கிருந்து அவர்கள் ஒரு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அப்போது தில்லைநகர் 5-வது கிராஸ் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திருகண்ணன் சட்டை பையில் இருந்த ரூ.200-ஐ ஒருவர் திருடி, மற்றொருவருடன் கொடுத்தார். பின்னர் 2 பேரும் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த திருகண்ணன் நண்பர் உதவியுடன் அவர்களை விரட்டி சென்று கையும், களவுமாக பிடித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆழ்வார்தோப்பு காஜாபேட்டையை சேர்ந்த காஜா உசேன்(41), மற்றொருவர் தென்னூர் பகுதியை சேர்ந்த அபுதாகீர்(39) என்பதும், அவர்கள் தான் திருகண்ணனிடம் பணம் திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில், 2 பேரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்