உதவி புவியியல் வல்லுனர் பணிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது உதவி புவியியல் வல்லுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2017-02-27 08:00 GMT
சுரங்கம், பொதுப்பணித்துறை, வேளாண் பொறியியல், நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புவியியல் தொடர்புடைய பாடப்பிரிவுகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 21-3-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 24-6-2017 மற்றும் 25-6-2017-ந் தேதிகளில் நடை பெறுகிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறியவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்