கெங்கவல்லி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கடந்த

Update: 2017-04-06 22:15 GMT

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஊராட்சி செயலாளர் மோகன் விரைந்து வந்தார். பின்னர் அவர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அவர் உடனே நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்