குடிநீர் வசதி கேட்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வசதி கேட்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Update: 2017-06-21 22:00 GMT

க.பரமத்தி

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள குப்பம் ஊராட்சி சாலிபாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன், ஒன்றிய ஆணையர் தண்டபாணி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்