தாம்பரம் அருகே பள்ளிக்கூட மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தாம்பரம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-22 00:00 GMT

தாம்பரம்,

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், தாரகேஸ்வரி நகர், 1–வது தெருவை சேர்ந்தவர் சுபிதா பிஸ்வாஸ். இவரது மகள் சீல்பி பிஸ்வாஸ் (வயது 16).

இவர் மாடம்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த சீல்பி பிஸ்வாஸ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சீல்பி பிஸ்வாஸ் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்