வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் சுருக்கமாக ஏ.ஐ.சி. எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

Update: 2017-09-25 06:51 GMT
இது ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளாகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் 25 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 4 இடங்களும் உள்ளன.

1-9-2017 தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
பி.எஸ்சி. வேளாண்மை படிப்பு, பி.இ., பி.டெக் (அக்ரி என்ஜினீயரிங்), எம்.எஸ்சி. (அக்ரி), எம்.சி.ஏ., எம்.டெக், பி.காம், எம்.காம் போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ., எம்.பி.ஏ., படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2017-ந் தேதி ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 18,19-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aicofindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்