வியாபாரி வீடு புகுந்து ரூ.2.40 லட்சம் நகை, பணம் திருட்டு

வியாபாரி வீடு புகுந்து ரூ.2.40 லட்சம் நகை, பணம் திருட்டு

Update: 2017-10-09 22:45 GMT

நெல்லை,

நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன். வியாபாரி. இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். நேற்று காலை வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்