வேதாரண்யம் அருகே இறந்தநிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

வேதாரண்யம் அருகே இறந்தநிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

Update: 2018-02-25 22:45 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் டால்பின்கள் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடியக்கரை கடலுக்கு டால்பின்களின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் டால்பின்களை வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

இந்த டால்பின்கள் படகில் அடிபட்டும், மீனவர்களின் வலையில் சிக்கியும் இறந்து கரை ஒதுங்குகின்றன.

இந்தநிலையில் நேற்று வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் 4 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. இதனை கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் எடுத்து சென்று புதைத்தனர். 

மேலும் செய்திகள்