அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் உருவச்சிலை முன்பு செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.