சிலை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ்சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ்சந்திரகபூரை போலீசார் நேற்று பலத்த பாதுகாப்போடு கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Update: 2018-05-16 22:30 GMT
கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இதைப்போல அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகளும் விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகளும் திருட்டுபோனது.

ஒத்தி வைப்பு

இந்த 3 வழக்குகளிலும் அமெரிக்காவில் இருந்த சுபாஷ்சந்திரகபூருக்கு தொடர்பு உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனால் சுபாஷ்சந்திரகபூரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை

விசாரித்த நீதிபதி வருகிற 30-ந் தேதிக்கு(புதன்கிழமை) வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்