அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2018-06-07 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் பழனிசாமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ-மாணவிகள் சேர்த்து கொள்ளப்படு கின்றனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறி வியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கும், நாளை (சனிக் கிழமை) தமிழ், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாது காவலருடன் கல்லூரிக்கு வரவேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் தங் களது பெற்றோருடன் வந்திருந் தனர். மேலும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே அரசு கலைக்கல்லூரி இது என்பதால் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகின்றனர். இதில் பலருக்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசானது ஒவ்வொரு பாட பிரிவிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்கி ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்