கார் மோதி தொழிலாளி சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2018-08-23 21:45 GMT
அரசூர், 


உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆராவமுது (வயது 40), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் மடப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே பாக்கம் கூட்டுசாலை அருகில் செல்லும்போது எதிரே மடப்பட்டில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக சென்ற ஒரு கார், எதிர்பாராதவிதமாக ஆராவமுதுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த ஆராவமுதுவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்