லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்

சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

Update: 2018-09-03 22:15 GMT

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புதாசன் (வயது 15). இவரும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கர்னல்ராஜ் (15), பாரதி (15) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் அன்புதாசன் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்