உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி

நாக்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துர்கா நகரை சேர்ந்தவர் பரிதோஷ் சுரேஷ் (வயது 27). இவர் பயோ-டெக்னாலஜி பிரிவில் பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக தேர்வு எழுத தயாராகி வந்தார்.

Update: 2018-09-04 23:16 GMT
மும்பை,

பரிதோஷ் சுரேஷ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி திடீரென மாயமானார். பின்னர் 4 நாட்களுக்கு பிறகு பேசா அருகே உள்ள கோகலி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மற்றும் தடய அறிவியல் சோதனை மூலம் அவர் கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொள்ளவில்ைல என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவரது மர்மச்சாவில் துப்பு துலங்கி உள்ளது.

பரிேதாஷ் சுரேஷ் தனது உடல் எடை அதிகரித்ததை நினைத்து கவலை கொண்டுள்ளார். இதனால் செல்போன் மூலம் கூகுளில் உடற்பருமனை குறைப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்களை திரட்டி உள்ளார்.

அப்போது கூகுளில் கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட மாத்திரையை சுயமாக வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அந்த மாத்திரையை அதிகளவு அவர் தின்ற காரணத்தினால் சம்பவத்தன்று வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு மயங்கி விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்