இன்று முழு அடைப்பு போராட்டம்: சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

Update: 2018-09-09 22:15 GMT

சென்னிமலை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க செயலாளர் பி.ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, ‘இன்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னிமலையில் உள்ள விசைத்தறிக்கூடங்கள் இயங்காது’ என்றார்.

மேலும் செய்திகள்