காட்பாடியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

காட்பாடியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-09-16 22:45 GMT
வேலூர்,

விநாயகர் சதுர்த்தியை யொட்டி காட்பாடியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக சித்தூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. சிறப்பு அழைப் பாளர்களாக இந்து முன்னணி மாநில பேச்சாளர் வக்கீல் சங்கர், டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மண்டல தலைவர் செந்தில்குமார், கோட்ட செயலாளர் ரவி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஊர் வலம் திருவலம் ரோடு வழியாக சென்று அங்குள்ள கல்குவாரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்