தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை

ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-21 22:12 GMT
ஸ்ரீமுஷ்ணம், 


ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் காலனியை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் பிரகாஷ் (வயது 28). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு மாதவி(12) என்ற மகளும், பரணிதரன்(10) என்ற மகனும் உள்ளனர். மாதவியையும், பரணிதரனையும் அதே பகுதியில் உள்ள காமாட்சியின் அண்ணன் கலைஞர்பித்தன் பராமரிப்பில் விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் கேரளாவில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பிரகாஷ், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தம் பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலைஞர்பித்தன் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்