திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2018-09-28 22:00 GMT
திருவாரூர், 


திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளத்தை சேர்ந்தவர் ராமையன். இவருடைய மகன் வினோத் (வயது 25). இவர், அதே ஊரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஜீவிகா (20) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே ஜீவிகாவின் தாயார் பிரேமா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை யாரோ கடத்தி சென்றதாக புகார் கொடுத்துள்ளார்்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மாலை வினோத்-ஜீவிகா ஆகியோர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளோம். என்னை யாரும் கடத்தவில்லை எனது தாய் மற்றும் உறவினர்களால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் போலீசார், காதல்ஜோடியை முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்். இதையடுத்து வினோத்-ஜீவிகா முத்துப்பேட்டைக்கு புறப்பட்டனர். 

மேலும் செய்திகள்