பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட் டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

Update: 2018-10-04 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சாலை யில் சென்றதை காண முடிந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வந்தது. இதே போல் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் பலத்த மழையாக பெய்யாமல் நேற்று அதிகாலை வரை தூறிக்கொண்டிருந்தது. மீண்டும் நேற்று காலை 6 மணியளவில் பெய்த மழையும் தூறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் காலை 8 மணியளவில் பலத்த மழையாக சிறிது நேரம் கொட்டி தீர்த்தது.

அதனை தொடர்ந்து மழை காலை 11 மணி வரை தூறிக்கொண்டிருந்தது. நேற்று காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதை காண முடிந்தது. மழை பெய்ததால் வேலைக்கு செல்லும் ஆண், பெண்கள் குடை பிடித்தவாறு வேகமாக நடந்து சென்றனர்.

மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். நேற்று விட்டு, விட்டு பெய்த மழையால் சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங் காயம் போன்ற பயிர்களை நடவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்-1, பெரம் பலூர்-26, வேப்பந் தட்டை-20, தழுதாழை-29,பாடாலூர்-31.

மேலும் செய்திகள்