பால்கரில் இளம்பெண்ணை கற்பழித்த 2 மாணவர்கள் கைது

பால்கரில் இளம்பெண்ணை கற்பழித்த 2 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-06 22:22 GMT
மும்பை,

பால்கர் மாவட்டம் மொகடா தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் 17 வயது இளம்பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்தனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது அவர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த இளம்பெண்ணை சாலையோர புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இந்த கொடூர சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். பதறிப்போன பெற்றோர் இதுகுறித்து ஜவகர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் பால்கர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவரும் 17 வயது மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்