திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தீராத வயிற்று வலி காரணமாக, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-10 21:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் முல்லைவேந்தன்(வயது 20). இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக முல்லைவேந்தன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும், அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் முல்லைவேந்தனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், மாணவர் முல்லைவேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்