ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய வட்டக்கிளை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-10-10 22:45 GMT
கரூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய வட்டக்கிளை சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றிட கடுமையான நெருக்கடி கொடுக்காமல் அதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். வளர்ச்சித்துறை பணிகளை பிறதுறை அலுவலர்களை வைத்து மேற்கொள்வதை கைவிட வேண்டும், விடுமுறை நாட்களில் ஆய்வுகள், ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்