கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

மின்னல் தாக்கியதில் கடலுக்குள் மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.

Update: 2018-10-27 22:00 GMT

பனைக்குளம்,

மண்டபத்தை சேர்ந்தவர் மீனவர் கருப்பசாமி (வயது 40). இவர் கடந்த சிலநாட்களுக்குமுன்பு தனது மகன் கண்ணனுடன் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென கருப்பசாமி மீது மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த அவர் கடலுக்குள் தவறி விழுந்தார். அவரது மகன் கண்ணன் தனது தந்தையை மீட்க முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனை தொடர்ந்து மீன்துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர்கள் மாயமான மீனவரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். கடலோர காவல்படையினரும், மீனவர்களும் கடலுக்கு சென்று தீவிரமாக தேடினர். இந்த நிலையில் மணலி தீவு பகுதியில் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மண்டபம் வனத்துறையினர் அங்கு சென்று மீனவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து கடலோர போலீசார் அங்கு சென்று கரை ஒதுங்கிய உடல் கருப்பசாமி என்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் மீனவர் கருப்பசாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்